Monday 15 October 2012

ஜன்னல் கம்பிகூட காதலித்தது


ஜன்னல் கம்பிகூட
காதலிக்கிறது
என்னை
நீ
எப்போது வருவாயென
அடிக்கடி எட்டிபார்த்து
ஏங்கிதவிக்கும்
என்மேல் பரிதாபப்பட்டு
- அன்புடன்R.P.OM


Sunday 7 October 2012

ஹிப்னாடிஸ்ட்டுகள்

இந்த

ஊசல்குண்டைப்பார்
இப்போது
உன்
கண்கள் செருகுகிறது
உறக்கம் இமைகளை
தழுவுகிறது
என்றெல்லாம் மிகவும்
சிரமப்படுகிறார்கள்
பாவம்
வசிய துயிலில் ஆழ்த்துவதற்கு
ஹிப்னாடிஸ்ட்டுகள்

அவ்வளவு சிரமம் ஏன்
ஒரேமுறை
ஒரே ஒருமுறை
உன் கணகளை
நேருக்குநேர்
பார்த்தால் போதாதா?
- அன்புடன் ஓம்

முத்தக்கிரியையோ





கிஸ்ஸிங் ரோமிங்
மீன்களைவிடவும்
நீ
மோசமானவள்
அவைகளாவது
1/2 மணி நேரம்தான்
முத்தம்
கொடுத்துக்கொள்ளும்
ஆனால் உன்
முத்தக்கிரியையோ
எப்போது
முடியும் என்றே தெரியாது
- அன்புடன் R.P.OM
 

Saturday 6 October 2012

பச்சை சிக்னல் விழும்


தயவுசெய்து
முக்காடிட்டு
மூடிக்கொள்

உன் முழுநிலவு
முகத்தை

உன்னை பார்த்த
பரவசத்தில்
பச்சை சிக்னல்
விழும்
பாவம் ஏன் வீணாய்
கலவரம்
போக்குவரத்தில்

- அன்புடன் ஓம்
 

Friday 5 October 2012


சேரவே சேராதீர்கள்
காதலை வெறுக்கும்
நண்பர்களிடம்

சேரவே சேராதிர்கள்
நட்பை வெறுக்கும்
காதலியிடம்
அவள் பெரிய
உலக அழகி
என்றாலும் கூட

- அன்புடன் ஆர்.பி.ஓம்

Thursday 27 September 2012


அழகு பூசிய உன்
azagu poosiya un
நகமும் வேண்டாம்
nagamum vendaam
அழகு பூசிய உன்
azagu poosiya un
முகமும் வேண்டாம்
azagu poosiya mugamum vendaam
அன்பு பூசிய உன்
anbu poosiya un
அகம் மட்டும் போதும்
agam mattum podhum
அன்பே என் அன்பே!
anbe en anbe

அன்புடன் R.P.OM

Tuesday 25 September 2012


உன்
கண்களை மட்டுமே
phd செய்யவேண்டும்

உன் கண்கள்
சொன்ன சங்கதிகள்
இதுவரை
எந்த புத்தகத்திலும்
சொல்லப்படாததால்
- அன்புடன் R.P.OM
 

un kangali mattume
phd seyyavendum

unkangal
sonna sanggadhigal
idhuvarai
endha puththagaththilum
sollappadaadhadhaal
- anbudan om 

idhu innaikku ezudhuna kavidhai neeenge idhai ellam padikre
enakku yaarume illa ammu adhaan nan vettiyaayiten,sondham bandham,frnd,

Friday 14 September 2012





30
நாட்கள் மட்டுமல்ல
365 நாட்களும்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்

என் அன்பே
நீ
முடி கோதும்
அழகை

- அன்புடன் ஓம்
 

Tuesday 11 September 2012



ஆசையாயிருக்க
அநேகம் பெண்கள் இருக்கலாம்
அது எதற்கு எனக்கு
அன்பாய் தேடி வரும் பட்டாம்பூச்சியே
நீ போதும் என்க்கு
- அன்புடன் ஓம்

Monday 10 September 2012


காலையில்
எனை பார்த்து
சிரித்தாய்
நானோ
நாள் முழுவதும்
சிரிக்கிரேன்
யாரைப் பார்த்தாலும்
சிரிக்கிறேன்
கண்மணியே
உன் நினைவாகவே!
- அன்புடனோம்
 —

குளிர்ந்த காற்று
முகத்திலறைந்தது போல
இருந்தது
உன் ஓர விழி பார்வை
- அன்புடன் ஓம்
 — 

அதிர்ஷ்டப்பெயர் வைத்தோ
அரசியல் செய்தோ
கோள் சொல்லியோ
குடி கெடுத்தா
ஜாதகம் சொல்லியோ
பாதகம் செய்தோ
சீர்திருத்துகிரேன்
என்ற பெயரில்
நன்றாக உள்ள 
கணிணி,மோட்டார் சக்கர
பாகங்களை 
திருடிக்கொண்டு
எங்கொ திருடியதை இங்கே விற்று
இரட்டிப்பு லாபங்களை அடைந்தோ
தேகத்தை காட்டியோ
ஏக்கத்தை மூட்டியோ
ஆளுயர புகழ்ந்தோ
ஜால்ராவை போட்டோ
சட்னியை விற்றோ
கிட்னியை திருடியோ
சாமர்த்தியம் உள்ளவர்கள்
பிழைத்துக்கொள்கிறார்கள்
பாவம் எம் அப்பாவி மக்கள்
இறைவா
அவர்கள் என்ன செய்வார்கள்
நல்லவர்களும் வல்லவர்களும்
ஆட்சியில் அமரவும்
நல்லவர்கலை தேர்ந்தெடுக்கும் நற்புத்தியும்
எம் மக்களுக்கு அருள்வாயாக!
அழகெல்லாம் மாநாடுகள் நடத்தி இவள்தான் பேரழகி என்று பறைசாற்றின



சல்லடை போட்டு சலிக்கவேண்ட்டாம்
காதலை
அது சரியில்லை இது சரியில்லை
முகம் சரியில்லை மூக்கு சரியில்ல
பர்ஸ் சரியில்லை பாக்கெட் சரியில்லை என்று
அதிகம் சலித்தபின்
மிஞ்சுவது மண்ணாங்கட்டிகளே
- அன்புடன் ஓம்

Sunday 9 September 2012





ஆடையோடு அழகாய் இருக்கிறாய்
ஆடையின்றியும் அழகாய் இருக்கிறாய்
சிரித்தாலும் அழகாயிருக்கிறாய்
சிரிக்காவிட்டாலும் ழகாயிருக்கிறாய்
கோபத்திலும் அழகாய் இருக்கிறாய்
அமைதியிலும் அழகாய் இருக்கிறாய்

முகம் சுளித்தாலும் அழகாய் இருக்கிறாய்
மூக்கை சிந்தினாலும் அழகாய் இருக்கிறாய்
கண்களை விரித்தாலும் அழகாய் இருக்கிறாய்
கைகளை விர்த்தாலும் அழகாய் இருக்கிறாய்

எழுந்தது முதல் உறங்கும் வரை
எல்லா நிலையிலும் அழகாகவே இருக்கிறாய்

பிறகு ஏன் கேட்கிறாய் இப்படி
உனக்கு
வேற வேலையே இல்லையா
ஏன் என்னையே சுற்றி சுற்றி
வருகிறாய் என்று
- அன்புடன் ஓம்
 

நான் பேசுவதை கேட்டுவிட்டு
அவள் ஹாஹா
பதிலுக்க்கு நான்
ஹிஹி
பதிலுக்கு அவள்
ஹூ ஹூ
இப்படியே தொடர்ந்தது தமிழ்
எழுத்துக்கள்
நான் சொன்னேன்
அப்படியே
247 எழுத்துக்களிலும் சிரித்துவிடு
தமிழ் சொல்லி
தந்த புண்ணியம் கிடைக்கு என்று
- அன்புடன் ஓம்
 

நான் பேசுவதை கேட்டுவிட்டு
அவள் ஹாஹா
பதிலுக்க்கு நான்
ஹிஹி
பதிலுக்கு அவள்
ஹூ ஹூ
இப்படியே தொடர்ந்தது தமிழ்
எழுத்துக்கள்
நான் சொன்னேன்
அப்படியே
247 எழுத்துக்களிலும் சிரித்துவிடு
தமிழ் சொல்லி
தந்த புண்ணியம் கிடைக்கு என்று
- அன்புடன் ஓம்
நீ
கொல்லென்று சிரித்தாய்
நெஞ்சில்
ஜில்லென்று
மழை!







அழகான பொண்ணுங்க
சிரிச்சா
ஜொல்லு வடிவதற்குமுன்
கவிதை வடிகிறது
ஏன் அப்படி?
- அன்புடன் ஓம்


Photo: அழகான பொண்ணுங்க
சிரிச்சா
ஜொல்லு வடிவதற்குமுன்
கவிதை வடிகிறது
ஏன் அப்படி?
- அன்புடன் ஓம்

Saturday 8 September 2012


 ·  · 
எந்த 
பச்சை குழந்தைக்கும்
பிடித்த 
மிட்டாய் 
தேவதை
நீ
- அன்புடன் ஓம்
எந்த 
பச்சை குழந்தைக்கும்
பிடித்த 
மிட்டாய் 
தேவதை
நீ
- அன்புடன் ஓம்

Friday 7 September 2012


ஊறுகாயை பார்த்ததும்
உனக்கு
வாயில் எச்சில் ஊறியது
நீ
சப்பு கொட்டும் அழகை பார்த்ததும்
எனக்கு
வாயில் எச்சில் வடிந்தது
- அன்புடன் ஓம்
 


வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை அறிவிக்கின்றன
மரணம்
பூகம்பம்
சுனாமி
விபத்து
இவையெல்லாம்
இருந்தாலும்
ஏன்
அன்பே மறுக்கிறாய்
இதயத்தை தருவதற்கு

நிலையிலாத
அழகு
அந்தஸ்து
செல்வத்தை எண்ணி!
தயவு செய்து
நான் அலுவலகத்திற்கு
செல்லும்போது
சிரித்து தொலைத்துவிடாதே
பிறகு எனக்கு வேலை
அலுவலகத்தில் இல்லை
வீட்டில்தான்
- அன்புடன் ஓம்

Thursday 6 September 2012

எனக்கான
காதலின்
சின்னம் 
உன்
விழிமீன்
- அன்புடன் ஓம்


சுற்றி நின்று
ஆராய்ச்சி செய்தன
மீன்கல் எல்லாம்
மீன் விழியாளே என்று
உன்னை
நான்
வர்ணித்ததை கேட்டு
- அன்புடன் ஓம்

தூண்டில் இட்டும் 
சிக்காத மீன்கள்
நீ 
தண்ணீரில் இறங்கியதும்
கூட்டம் கூட்டமாய்
உன் அருகினில்
- அன்புடன் ஓம்
நிலவை ரசிக்க
விண்மீன்களின் கூட்டம்
உன்னை ரசிக்க
மீன்களின் கூட்டம்
கரையிலேயே குளி
என் அன்பே
நான் விளையாத முடியாத
 இடத்திலெல்லாம்
மீன்கள் விளையாடுகின்றன

Wednesday 5 September 2012

மீன் தின்னுவதை
நிறுத்திவிட்டேன்
உன்
மீன்விழி கண்ட
அந்த நாளிலிருந்து
- அன்புடன் ஓம்
எச்சரிக்கையாயிரு 
மீன்கள் 
அழுக்கை தின்னவில்லை
உன் 
அழகை தின்னுகின்றன
தவம் கிடக்கின்றன 
மீன்கள்
ஒரு முறை
கடலில் கால் நனைத்த நீ
மறுபடி எப்போது 
கால் நனைப்பாய் என்று

Sunday 19 August 2012

நண்பன் கேட்டான்
காதலுக்கு டிப்ஸ் குட்றான்னு
எனக்கே டிப்ஸ் தேவைப்பட்டாலும்
கெத்த விட்டு கொடுக்காம டிப்ஸ் கொடுத்தேன்
உன் தகவலனைத்தையும் மறைத்துவிடு
ஜில்லுனு பேசு
பொய்முகம் காட்டு
எக்காரணத்த கொண்டும் வயச சொல்லாதே
வெளிப்படையா இருக்கவே கூடாது
தகவலனைத்தையும் சேகரி
பிடிச்சிருந்தா தொடரும்னு போடு
இல்லையா முற்றுபுள்ளி வை
இதை எல்லாம் செய்
நீ பொய்யானவன் என்றால்
இல்லை நான் மெய்யானவன்
என்றால்
உண்மைகளை உளறிவிட்டு
காத்திரு காதல் கனியும்!
வெளியே மழை பொழிகிறது
காற்றின் ஸ்பரிசத்தால்!

நெஞ்சுக்குள்ளும் மழை பொழிகிறது

உன் விரலகளின் ஸ்பரிசத்தால்!
பிரம்மச்சர்யம் என்றால்
என்ன?
அர்த்தம் தெரியவில்லை எனக்கு
நான் உன் இதழின் அருகில் இருக்கும்போது!


கனவில் கண்ட பண்டம்
ஆசையை தீர்க்குமா?
ஆனாலும்
ஆசையை தீர்க்கிறாயே
நீ மட்டும்
கனவில் வந்து
எப்படி?
- அன்புடன் ஓம்


தைரியமாக சொல்
உன் வயதை
தைரியமாக வெளிப்படுத்து
உன் தோற்றத்தை
உண்மையோடிரு
அன்புக்காக

ஒரு காதலிக்காக
ஆயிரம் ஆயிரம்
சகோதரிகளை இழந்துவிடாதே!
[இப்படிக்கு ஃபேஸ்புக்கிலும் சகோதரிகளை நேசிப்போர் சங்கம்]
- அன்புடன் ஓம்
காத்திரு
யுகங்கள்
கடந்தாலும்
உனக்கான இதயமும்
அவ்வாறே உன் வருகைக்காக காத்திருக்கும்
உண்மையுள்ள காதல்

அது உன் வயது
அழகு
வசதி
திறமை எதையும்
எதிர் பாராமல்
- anbudan om

Saturday 18 August 2012


மழைத்துளிகளை
ரசிக்க வந்த உன்னை
மலரோடு சேர்ந்து மழைத்துளிகளும் ரசிக்கின்றன
- அன்புடன் ஓம்

பூக்களின் மீது
பெய்த
மழைத்துளியாய்
உன் இதழில் பூத்திருக்கும்
வேர்வைத்துளிகள்
-அன்புடன் ஓம்

மழையின் வருகையால்
உன் இதயம் ஈரமானது
உன் வருகையால்
என் இதயம் ஈரமானது

- அன்புடன் ஓம்

எனக்கு பொறாமையாக இருக்கிறது
நான் முத்தமிடவேண்டிய கன்னத்தில்
மழை முத்தமிட்டுகொண்டிருக்கிறது
- அன்புடன் ஓம்
குடை பிடித்துகொண்டுபோ
குளிர் மயக்கத்தில்
உனை ஆழ்த்திவிட்டு
கண்ட கண்ட இடங்களில்
முத்தமிடுகிறது
இந்த களவானி மழை

காதலிக்கிறேன்
என்ற உன் ஒற்றை வார்த்த்யை
கேட்டுவிட்டு ஆகாயம்
பல ஆயிரம் முறை பூமியில்
உன் பாதங்களை தொட்டு வணங்குகிறது
இதற்குப்பெயர்தான்
மழையோ?
- அன்புடன் ஓம்
 

Thursday 19 July 2012


தேன் சுமந்து வந்த தேவதையே - 2


எல்லா சத்தங்களும் ஒடுgங்கிய
நடு சாமத்திலும்
தாளம் வாசிhத்தனவே
நமது உதடுகள்
முத்த்த சத்தத்தால்

அந்த கார்கால
இரவு பொழுதிலும்
நம் முத்தசத்த்திற்கு
போட்டியாக
தாமரை தடாகத்தில்
தவளைகள் சத்தம்

எனக்காக
உன் பிஞ்சுக்கரங்களில்
தேன் சுமந்து வந்த தேவதையே
இதழில் தேன் தடவிவிட்டு
உன் இதழ்த்தேன்
போதும் என்றேனே!

மூக்கின் புல்லாக்கை
முத்தமிடும்போது
இது என்ன இடைஞலாய்
என்று நீ கழற்றி
வீசச்சென்றாயே
அதை வாங்கி என் கழுத்தில்
நம்
காதலின் சின்னமாய்
அணிந்து கொண்டேனே!
மணலில் புதைந்த
உன் கால் கொலுசை
அந்த இரவிலும் தேடி தந்தேனே
ஆச்சரியத்தில் மூழ்கிய நீயோ
என் கன்னத்தை கிள்ளினாயே

பார் என் கன்னத்தை
அந்த இரவின் காயம்
இப்போது மச்சமாய்
என் கன்னத்தில்

நதியோடு
நடைபோட்டு
உன் இடையில்
கை போட்டேன்
எல்லையை மீறாதே என்று
நீயும் தடை போட்டாயே!

ஓயாது பேசுவாய்
நானும் ஆச்சரியத்தில் மூழ்கி ஆச்சரியத்தில்
இறங்குவேன்
இந்த உறுப்பு எதனால் செய்யப்பட்டது என்று

விட்டு விட்டு
ஒலித்ததே
சில் வண்டின் சத்தம்
நம் பேச்சு சத்தத்தை
ஒட்டு கேட்டபடி

பால் நிலவின்
பால் ஒளியில்
உன்
பால் மேனியில்
பாலபிஷேகம்
செய்யத்தொடங்கி இருந்தேன்

காற்றும்
நுழைய இயலா வண்னம்
என்னை இறுக்கிகொண்டு
மூச்சும் மூச்சும்
பேசிக்கொள்ளும்
நெருக்கத்தில்
அமர்ந்திருந்தாயே
அருகில் துள்ளி ஓடிய
காட்டு முயலை கண்ட அச்சத்தில்

சில்லென்ற காற்று
என் தேகத்தை தூண்டி
உன் கண்களை ஆராய்ச்சி செய்யச்சொன்னது
நானும் உன் கண்களையே
உற்றுப்பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்
வெட்க தாளாமல் வெட்கி வெட்கி
நீயும் தலை குனிவாயே!

கண்களால் தேன்
பருகிக்கொண்டிருந்தேன்
கண்ணழகி
உன்னைக் கண்ணாரக்க கண்டு!
தூக்கமில்லாத
அந்த ப்பொழுதுகளை
இப்பொழுதுஇ நினைத்தாலும்
ஏக்கமாக இருக்கிறது

நான் உன்வாசம்
பிடித்துக்கொண்டிருந்தேன்
நீயோ
அருகில்
இரவில்
மலர்கின்ற
காட்டுப்பூவின்
வாசம் பிடித்துக்கொண்டிருந்தாய்

நீ வாசம் பிடித்த
அந்த பூவை
பறித்து வந்து உன்கூந்தலில்
நான் சூட்ட
இலக்கணம் வரைய முடியாத
ஒரு பார்வை பார்த்தாயே
புன்னகைத்தாயே
அந்த பார்வையும் புன்னகையும்
இன்றும் என் ஞாபகத்தில்!

சங்க காலத்து இலக்கியங்கள் எல்லாம்
உன் அங்க இலக்கியத்தை
எனக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தது

புற நானூறு
உந்தேகத்தின் வரலாறு சொல்லிக்கொண்டிருந்தது

அக நானூறு
உன்னிடம் படிக்க வேண்டிய
சுக நானூற்றை
எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது
இருவரித்திருக்குறளோ
உன்னிரு இதழ்க ளில்
எப்படி தேன் குடிப்பது என்று
செப்பிக்கொண்டிருந்தது
மணிமேகலை
படிக்கச்சொன்னது
உன் இடைமேகலையை
பரிபாடலோ
உன் இரு கருவிழிகளின்
பெறுகின்ற இன்பத்தை எடுத்தியம்பியது

ஆல்ய மணியின் ஓசை
தேவார சத்தம்
காற்றில்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

தேன் சுமந்து வந்த தேவதையே - 2





காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி...
அப்போதுதான்
நாம் நி
நினைவுக்கு வந்தோம்
கிழக்கில்
கதிரவன்
நம்மை கண்டு
நானத்தால் சிவந்து
மெல்ல எட்டிப்பார்த்தான்
நான்
முறைத்தேன்
அதற்குள்
என்ன அவசரம் என்றேன்
வெடுக்கென்று நீ சிரித்தாய்
அதைக்கேட்டு

அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
நீதான்
என்
இளவரசி!
நாந்தான் உன்
இளவரசன்!
- அன்புடன் ஓம்