தேன் சுமந்து வந்த தேவதையே - 1
அன்பே
உன் மனம் போகட்டும்
கடந்த ஜென்மத்திற்கு
அங்கே பார்
சோழ தேசத்தில்
நான் இளவரசன்
நீ இளவரசி
மறந்து விட்டாயா?
நாம் பேசிய
காதல் கதைகளை!
நீ இடப்பக்கத்தில்
நான் வலப்பக்கத்தில்
பௌர்ணமி நிலவை
தூங்கவிடாமல் பிடித்துக்கொண்டு
பேசிய கதைகள் எத்தனை?
எத்தனை சுகம்
வாகன இரச்சல் இல்லாத
அக்காலத்து இரவு
எத்தனை சுகம்
பொன்னையும் பொருளையும்
எதிர்பாராமல் உன்
புன்னகையை மட்டும்
எதிர் பார்த்த அந்த இரவு
எங்கொ போரில்
காளிகளும் கூளிகளும்
ரத்தம் பருகிக்கொண்டிருந்த
அந்த நேரத்திலும்
நாம் அன்பை பருகிகொண்டிருந்தோம்
பொறுத்து பார்த்த
நமது புரவிகள் இரண்டும்
காதல் செய்யத்தொடங்கிவிட்டன
என்னை கைகளால் தூக்கிச்
சுற்றிகாட்டிய வீரமங்கை
அல்லவா நீ
இதை
எட்டிப்பார்த்த ஆந்தை
நம்மை கண்டு
நாணப்பட்டு பறந்தோடியதே!
தேகப்பலகையில்
நாம் இருவரும்
காதல் அரிச்சுவடி
பழகிக்கொண்டிருந்தோம்
தஞ்சை பெரிய கோவிலின் சிற்பத்தை
உன் முதுகில்
வரந்த கோலத்தை எண்ணிப்பார்
உன் தோழிகள்
மார்பில் வரைந்த மருதாணி
கோலத்தை என்னிடம்
காட்டி மகிழ்ந்தாயே!
உன் மனம் போகட்டும்
கடந்த ஜென்மத்திற்கு
அங்கே பார்
சோழ தேசத்தில்
நான் இளவரசன்
நீ இளவரசி
மறந்து விட்டாயா?
நாம் பேசிய
காதல் கதைகளை!
நீ இடப்பக்கத்தில்
நான் வலப்பக்கத்தில்
பௌர்ணமி நிலவை
தூங்கவிடாமல் பிடித்துக்கொண்டு
பேசிய கதைகள் எத்தனை?
எத்தனை சுகம்
வாகன இரச்சல் இல்லாத
அக்காலத்து இரவு
எத்தனை சுகம்
பொன்னையும் பொருளையும்
எதிர்பாராமல் உன்
புன்னகையை மட்டும்
எதிர் பார்த்த அந்த இரவு
எங்கொ போரில்
காளிகளும் கூளிகளும்
ரத்தம் பருகிக்கொண்டிருந்த
அந்த நேரத்திலும்
நாம் அன்பை பருகிகொண்டிருந்தோம்
பொறுத்து பார்த்த
நமது புரவிகள் இரண்டும்
காதல் செய்யத்தொடங்கிவிட்டன
என்னை கைகளால் தூக்கிச்
சுற்றிகாட்டிய வீரமங்கை
அல்லவா நீ
இதை
எட்டிப்பார்த்த ஆந்தை
நம்மை கண்டு
நாணப்பட்டு பறந்தோடியதே!
தேகப்பலகையில்
நாம் இருவரும்
காதல் அரிச்சுவடி
பழகிக்கொண்டிருந்தோம்
தஞ்சை பெரிய கோவிலின் சிற்பத்தை
உன் முதுகில்
வரந்த கோலத்தை எண்ணிப்பார்
உன் தோழிகள்
மார்பில் வரைந்த மருதாணி
கோலத்தை என்னிடம்
காட்டி மகிழ்ந்தாயே!
No comments:
Post a Comment